புலிகளின் தலைவரின் வீர மரணம் பற்றி இன்னுமே எவராலும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை, அந்த இருண்ட இறுதிக் கணங்கள் புலிகளின் தலைவருக்கும் இன்னும் சிலருக்குமே வெளிச்சம். அதை மக்களுக்கு வெளிக்காட்ட அந்த சக்திகளும் தயாரில்லை .
இந்த நிலையில் பல்வேறு சக்திகள் பல கட்டுக் கதைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி தமிழ் உணர்வாளர்களை மனம் தளர வைக்க முயற்சித்து வருகின்றன.
முதலில் தலைவர் உயிருடனுள்ளதாக அறிவித்த புலிகளின் அனைத்துலக செயலகம், தற்போது வீரசாவடைந்தாக துக்கம் அனுஷ்டிகின்றது. தமிழக தமிழின உணர்வாளர்களான நெடுமாறனும் வைகோவும் , "இது தவறான செய்தி , தலைவர் வருவார்" என்கின்றனர். பத்மநாதனை கண்டிக்கின்றனர். தமிழின விரோதிகள் எதிர்பார்த்தும் இதைத்தான். தலைவரின் மரணம் , ஈழ மற்றும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அத்துடன் இனிவரும் புலிகளின் தலைமை , இந்த அனுதாபத்தை பயன் படுத்தி இது வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் நடுநிலைமை வகித்தவர்களையும், ஒன்று திரட்டி விடுமோ என்ற அச்சமும் இந்த தமிழின விரோதிகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளிடன் உள்ளது. எனவே தலைவர் மரணத்தை ஒரு வதந்தியாக வைத்திருப்பது , இவர்களுக்கு சாதகமே. அத்துடன் புலித் தலைமை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கூட , ஈழ தமிழரை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தவும் மேலை நாடுகளை பாராமுகமாக வைத்திருக்கவும் முடியும்.
இந்த நிலையில் இதுவரை புலித்தலைமையை விமர்சித்து , புலிகளால் தான் எல்லாமே என்று கண்ணை மூடிக்கொண்டு அறிக்கை விட்டு தம்மை தாமே மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் , இன்று , புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரை , தூரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர் . இதுவரை காலம் அவர்கள் சுமத்திய குற்ற சாட்டுக்களான, தனது பிள்ளைகளை யுத்தத்தில் ஈடுபடுத்த வில்லை , யுத்த வலயத்தை விட்டு ஓடிவிட்டார் போன்றவை பொய்யாக , என்ன செய்வதறியாது திகைத்துபோய் நிக்கின்றனர், மற்றும் அவர்களை பொறுத்தவரை புலித் தலைமை மரணமடைந்து விட்டது இனியும் எதிர்த்து அறிக்கை விட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனக் கண்டு கொண்டனர் .
இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் எனியும் ஒரு வலிமையான தமிழ் தலைமை வர அனுமதிக்க போவதில்லை. தமக்கும் அந்த இடத்தை நிரப்ப ஆளுமை கிடையாது என்றும் தெரியும். அத்துடன் வெறுமனே கண்டன அறிக்கை விட்டு பழகிப் போன இவர்கள் இன்று யாரை எதிர்ப்பது என்று தெரியாது புலம்பி தமது அடுத்த இலக்காக தெரிவு செய்திருப்பது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் பத்மநாதனை.
நான் இங்கே புலித்தலைவர் இறந்து விட்டதாகவோ , பத்மனாதனுக்காக வாதிடவோ வரவில்லை. எனது ஆதங்கமெல்லாம் , தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய இந்த தருணத்தில் அவர்களை குழப்பத்தி ஆழ்த்தி பேரினவாதிகளுக்கு துணை போகின்றனரே இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் என்பது மட்டுமே. புலிகள் மட்டும் ஒதுங்கிக் கொள்ளட்டும் , தமிழ் மக்களுக்கு நாம் விடுதலை பெற்று தருவோம் என்றெல்லாம் முழக்கமிட்டனர் இந்த மாமணிகள். இப்போதுதான் அந்த சூழ்நிலை வந்துவிட்டதே , ஈழத்துக்கு போய் உதவுவார்கள் என்று பார்த்தால் , எனி யாரை எதிர்த்து அறிக்கை விடலாம் என்று சிந்திகின்றன்ர் இந்த புத்தி ஜீவிகள்.
மக்களே தயவு செய்து , இந்த (ஏ) மாற்று காரர்களின் பேச்சை நம்பி பேரினவாதத்துக்கு சோரம் போய்விடாதீர்கள். இந்த போராட்டத்தில் நாம் உண்மையான மாற்றுக் கருத்தாளர்களை உருவாக்காது , எட்டப்பர்களை மட்டுமே உண்டாக்கி உள்ளோம் .இதற்கு என்ன காரணம் என்று விவாதம் செய்து ஒருவர் மேல் ஒருவர் பழியை போடாது, எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்.
என்னைப் பற்றி....
Welcome
எனது பதிவுகளை தமது தளங்களில் மீள் இடுகையிட விரும்புவோர் , எனது தள முகவரியை கண்டிப்பாக அந்தப் பதிவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிடின் படைப்புத் திருட்டு என்றே கருதப்படும். நன்றி
Blog Archive
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
நீங்கள் குறிபிடுவது ஷோபா சக்தியையா ? இனியும் இலங்கை போக மாட்டாரமே
இது எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு அல்லது போற்றுவதற்கு எழுதப்பட்டதல்ல. இனியாவது நாமெல்லாரும் ஒன்று படக்கூடாதா எனும் ஆற்றாமையால் எழுதப்பட்டது.
Post a Comment