பதிவை வாசிக்கும் முன் ,சில உணர்ச்சித் திலகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இந்தப் பதிவு ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி இடப்பட்டதல்ல.எந்த ஒரு கொலையையும் எந்த ஒரு நாகரிக மனிதனாலும் நியாயப் படுத்த முடியாது.இங்கே எனது நோக்கமானது,இன்று பலரால் நீட்டி முழங்கப் படுவது போல,"புலிகள் மட்டும் ராஜிவ் கொலையைப் பண்ணாமலிருந்தால் முழு இந்தியாவுமே ஈழத் தமிழர்களின் பின்னாலிருக்கும்" என்பது எவ்வளவு முட்டாள்தனமானது என ஆராய்வது மட்டுமே.உலகில் எந்த ஒரு நாடும் தனது நலன்களுக்கு மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே மற்றைய நாடுகளில் தலையிடுமே தவிர ,சமுக சேவை செய்து நீதியை நிலை நாட்டவேண்டும் என்று மூக்கை நுழைப்பதில்லை.இந்தியாவுக்கும் அவ்வாறான பின்வரும் நோகங்கள் இருந்தன
1. சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருங்கி வரும் இலங்கையை தட்டி வைப்பது
2. இலங்கை அரசு , அமெரிக்க வானொலி நிலையத்தினை திருகோணமலையில் நிறுவ அனுமதித்து தனது மேற்குலகு சார்ந்த நிலையை வேளிகாட்டியத்தை முளையிலே கிள்ளுவது
3. திறந்த பொருளாதாரக் கொள்கையை 1977ல் அதாவது இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் கைக்கொண்டு 92வீத எழுத்தறிவுடன் (இந்தியாவில் அப்போது 36 வீதம்) இலங்கை அடையத் தொடங்கிய துரித வளர்ச்சியினைத் தடுப்பது.
இதைத் தவிர யாராவது இந்திய மத்திய அரசு ,ஈழத் தமிழர் மேலுள்ள அக்கறையால் என வாதிட்டார்களானால், உலக நடப்பு தெரியாத அப்பாவிகள் என்றே அவர்களை அழைக்கலாம். நான் இங்கே தமிழக தமிழர்களின் இனஉணர்வு பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இந்தியா என்னும் போது இந்திய மத்திய அரசையே குறிக்கும்.
இந்திரா காந்தி ஈழத் தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கி தமிழ் நாட்டில் புகலிடமும் வழங்கப்பட்டது. இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.குழு மோதல் தொடங்காத அந்தக் காலத்திலேயே அனைத்து குழுக்களும் தனித் தனியேயே தங்க வைக்கப்பட்டன. ஏறத்தாள கூலிபடைகள் போலவே இந்த இயக்கங்கள் நடத்தப்பட்டன.இதை அனைத்து இயக்கங்களும் உணர்ந்தே இருந்தன. இந்தியா எதிபார்த்த மாதிரியே , இலங்கை அரசு இந்தியாவின் காலடியில் விழுந்தது.
திருகோணமலை எரிபொருள் களஞ்சியங்கள் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டு , வெளியுறவுக் கொள்கையில் இந்திய நலனுக்கெதிராக செயற்படமாட்டோம் என இலங்கை அரசு அறிவித்த மறு நிமிடமே , இந்தியா தான் கூலிப்படைகள் என அழைத்த தமிழீழ இயக்கங்களை ஆயுதத்தை போடுமாறு வற்புறுத்தியது. நில அதிகாரமோ , போலீஸ அதிகாரமோ அற்ற , கிராமசபைக்கு ஒப்பான திட்டத்தை மாகாண சபை எனத் திணித்தது.
இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் தென் பகுதியெங்கும் ,இலங்கை அரசு நாட்டை இந்தியாவுக்கு விற்று விட்டதாக கூறி பெரும் உள்நாட்டுக் கலவரமே வெடித்தது.
ராஜிவ் காந்தியைக் கொள்வதற்கான திட்டம் கூட வகுக்கப்பட்டு ,ஒரு சிங்கள சிப்பாய் ,ராஜிவ் காந்தியை தலை மண்டையில் அடித்துக் கொள்ள முயற்சிக்க , மயிரிழையில் தப்பினார் ராஜிவ்.அப்போதைய இலங்கைப் பிரதமர் பிரேமதாச மற்றும் சிங்கள மக்களால் தேசபக்தன் அந்த சிங்கள சிப்பாய் புகழப்பட்டு ஒரே நாளில் கதாநாயகன் ஆனான். அதன் பிறகு பிரேமதாசா ஜனாதிபதியாக அந்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டு, அரசால் மதிப்பளிக்கப் பட்டான். இவ்வாறு எல்லாம் நடந்தும் இந்திய அரசோ ராஜீவோ ஏன் இந்திய ஊடகங்களோ அனைத்துமே தொடர்ந்து இலங்கை அரசுக்கு சார்பாகவே செயற்பட்டன. நாம் காந்தி தேசம் , பெருந்தன்மை உள்ளவர்கள் எனத் சுய தம்பட்டம் அடித்தன.சிறிது கூட மனசாட்சி இல்லாது, நாம் தூண்டி விட்ட பிரச்சனை என்றும் பாராது தனது தேவை தீர்ந்ததும் ,இந்தியப் படைகளை அனுப்பி தானே தமிழ் மக்களை அடுக்கி கொன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் செயற்பாட்டையே இந்திய அரசு செய்ய ஊடகங்கள் ஆதரித்து வெகுஜனக் கருத்தை தாமே உருவாக்கின.அப்போதெல்லாம் மௌனமாக இருந்த இவை அனைத்தும் ,ராஜிவ் கொல்லப்பட்டபின் ,தமது தனிப்பட்ட நலன்களை நிலை நாட்ட ராஜிவ் கொலையைப் பயன்படுத்தி மறைமுகுகமாக தமிழினப் படுகொலையில் பங்குகொண்டன.
1987ல் கைச்சாத்தான அந்த ஒப்பந்தை இன்றும் இந்தியா தனது நலன்களுக்காக பாதுகாத்து , அந்த அரைகுறை ஒப்பந்தில் ஈழ தமிழருக்காக இருந்த சில உரிமைகளை சிங்கள அரசுகள் காலத்துக்கு காலம் பர்ரித்த போது இறையாண்மை என்று சொல்லி வாளாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே ஆயுதம் வழங்குகிறோம் எனக் கூறி தமிழ் மக்கள் கொலையில் தானும் பங்கு கொண்டது. இப்போது ராணுவ ரீதியில் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டபின்னரும் , இலங்கை அரசை ஐ நா சபையில் தனது பரம வைரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து காப்பாற்று கின்றது , இலங்கை அரசை தமிழ் மக்களுக்கு நியாய தீர்வை வைக்குமாறு நாமும் வற்புறுத்த மாட்டோம் , யாரும் வற்புறுத்தவும் கூடாது என்று மார்தட்டி நிற்கின்றது.
இன்னமும் ராஜிவ் கொலையே இதற்கு காராணம் எனக்கூறும் புத்தி ஜீவிகளிடம் நான் கேட்பது இந்தக் கேள்விகளைத்தான்
1.இப்போது ராஜிவ் என்று துடிப்பவர்களே ,அவர் சிங்களவர்களால் தாக்கப் பட்டு தாக்கப் பட்டவன் தேசிய நாயகனாக உருவகப்படுத்தப்பட்டபோது எங்கே போனீர்கள் ?
2.இந்திய அரசு வைத்த திட்டத்தில் நில மற்றும் போலீஸ அதிகாரங்களை இலங்கை மறுத்தபோதும் இந்தியா தமிழர்களை வற்புறுத்தியதே அப்போது என்ன செய்தீர்கள்
3.இந்திய ராணுவம் தமிழர்களைக் கொன்று பாலியல் வல்லுறவுகளை நடத்தி சொத்துகளை சூறையாடியதே அப்போது எங்கிருந்தீர்கள்
4.இப்போது வாய் கிழிய ராஜிவ் என முழங்கும் தமிழக காங்கிரஸ் வீரர்களே அப்போது ராஜிவின் இறுதிக் கூட்டத்திற்கு வராமல் எங்கே போனீர்கள் ?
5.இப்போதுதான் புலிகள் இல்லையே ஏன் இன்னும் இலங்கை அரசை இந்தியா பாதுகாக்கிறது என்று இப்போது கூட நீங்கள் கேட்கவில்லையே ஏன் ?
6.விடுதலைப் புலிகள் தமிழர்களை சிறை பிடித்தாக கூறிய இந்திய அரசு இன்னும் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிங்கள அரசால் அடைத்து வைத்தது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன் என்று இனிமேலாது கேட்பீர்களா?இல்லை இன்னும் ராஜிவ் மரணம் தான் காரணம் எனக்கூறி தமிழினப் படுகொலைகளை நியாயப் படுத்துவீர்களா ?
என்னைப் பற்றி....
Welcome
Blog Archive
-
▼
2009
(18)
-
▼
June
(6)
- ராஜிவ் காந்தி கொலையே , இந்தியாவின் ஈழத் தமிழின ஒழி...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - வரலாற்றுத் தேவை
- இனவெறி யுத்த வெற்றி இலங்கைக்கு T20 உலக கிண்ணத்தை ப...
- காந்தியின் உண்ணாவிரதம் - இன்று ??? அல்லது பாந்த...
- மாற்றுக் கருத்தாளர் ரயாகரனுக்கு ஒரு வேண்டுகோள் : ...
- (ஏ) மாற்று கருத்தாளர்களின் அடுத்த இலக்கு யார்?
-
▼
June
(6)
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை ,எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கவில்லை என்ற நிலையில் எது நடக்கப் போகின்றதோ , அதுவாவது நன்றாக நடக்க கூடாத என்பதே ஈழத் தமிழரின் இன்றைய ஏக்கம்.இந்த நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது வரை எதிரும் புதிராக இருந்த புலிகளின் சர்வதேச செயலகமும் புலனாய்வுத் துறையும் ஒன்றாக இயங்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலெழுந்து வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" பற்றிய ஒரு குழப்பமான மனநிலையே காணபடுகின்றது.
இலங்கையில் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் புலிகளும் இல்லாத நிலையில் இது தம்மை எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்ற அச்சமுற்ற வினாக் குறியே எழுந்து நிற்கின்றது. சிங்கள கொலை வெறி அரசால் முள்ளுக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட
அந்த மூன்று லட்சம் உறவுகளே வெளியுலக நடப்புகள் எதுவுமறியாது ஆண்களானால், எப்போது கடத்தப் பட்டு கொலை செய்யபடுவோமோ என்றும் பெண்களானால், இதை விட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுவோமோ என்ற சூழ்நிலையில் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில்,இது அவர்களின் இருப்பைப் பாதிக்கும் என்ற நிலை இல்லாதபோதும் இது எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்ற எண்ண மோதல்களே தற்போது காணபடுகின்றது.
இவ்வாறான நிலையில் எமது மாற்றுக்கருத்தாளர்கள் தமது வக்கிரத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.மகன் இறந்தாலும் பரவாயில்லை,மருமகள் பொட்டிழக்க வேண்டும் என்ற முது மொழியை மனதில் ஒரு பேரு மூச்சோடு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.இந்த நிலையில் ஏன் தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் அவசியம் என்று பார்தால் அது ஒரு வரலாற்றுத் தேவை என்றே புரிந்து கொள்ளலாம். இதுவரை காலமும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த புலிகள் இயக்கம் முற்றாக இராணுவ ரீதியில் அழிக்கப் பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு அவசியம்.இன்று இலங்கையில் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்ட அந்த மூன்று லட்சம் மக்களை மீட்டு சொந்த இடத்தில் குடியமர்த்தவும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து உலகளவில் குரல் கொடுக்க எம்முள் ஒற்றுமை அவசியம். அதனைக் செய்வதற்கு ஒரு அமைப்பு அவசியம்.
வெறுமனே ஒரு அமைப்பாக மட்டும் இல்லாது நாடு கடந்த அரசாங்கம் என்ற பெயரில் , உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை ஜனநாயக ரீதியில் ஒன்றிணைக்கும்போது , ஓரளவேனும் உலகநாடுகளின் கவனத்தை எம்மேல் திருப்பி , எமது மக்களின் இருப்பை உறுதிபடுத்த முடியும். அவ்வாறு அடிப்படை உரிமைகளை உறுதிப் படுத்தியவாறு எமது போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும். ராஜிவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி தனது பிராந்திய நலனுக்காக ஈழத் தமிழின ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய இந்தியா கூட ,இந்த அமைப்புக்கு வேண்டா வெறுப்பாக வேண்டியும் உதவ வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு சிங்கள இனவெறி அரசின் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நெருக்கமும் ஒரு காரணமாக அமையும்.
இந்த நிலையில் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளவேண்டும்.
1. ஜனாயக ரீதியில் பிரதிநிதிகளை வாக்கெடுப்பு மூலம் அந்தெந்த புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தல்
2. இவ்வாறு தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் மூலம் ஒரு செயல் குழுவை உருவாக்க வேண்டும்.
3. இந்த தேர்தல்களில் , மாற்றுக் கருத்துள்ள குழுக்களையும் இணைத்து மக்களிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை விடவேண்டும்.
4. சேகரிக்கும் நிதிகள் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
5. இனவெறி, சாதிவெறி, மதவாதம் , பிரதேசவாதம் என்பவற்றை நிராகரித்து , முஸ்லிம் மற்றும் மலையக மக்களையும் அரவணைக்க வேண்டும்.
இதைபோல மேலும் பல நல்ல அம்சங்கள் எமது மக்களுக்கு தோன்றலாம்.அவற்றை தேர்தெடுத்து கடைபிடித்தால் , உலக நாடுகளின் நன்மதிப்பை பெறுவதோடு , எமது உரிமைகளையும் விரைவாக பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு ஈழத் தமிழனதும் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அவசியம். அவ்வாறு அமையும் பட்சத்தில் , வெற்றி சாத்தியமானதுதான் சந்தேகமே வேண்டாம்.
தலைப்பை பார்த்தவுடன் , என்னடா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறானே என்று எண்ணாதீர்கள். அரை நாள் உண்ணாவிரதமிருந்து, அதை நேரடியாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பி , போர் நிறுத்தம் ஏற்ப்பட்டது எனக் கூறி மதிய உணவுக்கு வீட்டுக்கு நடையை கட்டும் ஆத்மாக்கள் மற்றும் அதை நம்பி புளாங்கிதம் அடையும் புத்திசாலிகள் வாழும் காலத்தில் இது மட்டும் ஏன் சரியாக இருக்க கூடாது என வரலாற்று ரீதியாக ஆராய்வோம் .
முதலில் இலங்கை அணி , 1996 உலகக் கிண்ணம் வென்றபோது போது இருந்த சூழ்நிலைகள் பாப்போம். யாழ் நகரம் சிங்களப் படைகளால் கைப்பற்றப் பட்டு , தமிழர்களின் பண்டைக் கால தலைநகரை கைப்பற்றி விட்டோம் என்று சிங்கள இனவெறி பெரும்பான்மை சிங்களரிடம் குடியிருந்த காலம் அது. கொழும்பு நகரெங்கும் தமிழர்கள் கடத்தப்பட்டு , வாவிகளில் பிணமாக மிதந்த காலம். இலங்கை ராணுவ அமைச்சர் , யாழ்ப்பாணத்தை வென்ற ஒரு சிங்கள மண்ணின் பெயரால் அழைக்கப்பட்டு , சிங்கள இனவெறி முதன் முறையாக அனைத்து சிங்கள மக்களையும் அணைத்துக்கொண்ட ஆண்டுதான் 1996.
அத்துடன் ரனதூங்கவின் தலைமையின் கீழ் , அரவிந்த , ஜெயசூரிய, களுவிதாரண, குருசிங்க, திலகரத்ன, மகாநாம, தர்மசேன, வாஸ், முரளிதரன் என அனைவருமே புதிய புதிய உத்திகளுடன் தம்மை நிருபித்து கிண்ணத்தை வென்றனர். சிங்களம் உலகத்தை வென்ற நாளாக அதிலும் இந்தியாவை மட்டம் தட்டிய திருப்தியில் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. யுத்தத்தில் வெற்றி , கிரிக்கட்டில் வெற்றி , எதிலும் வெற்றி என முழக்கமே எங்கும் எதிரொலித்தது.
இப்போது இந்த உலகக் கிண்ணத்தைப் பார்த்தோமானால் , யுத்த வெற்றியைப் பற்றியோ , சிங்கள இனவெறி பற்றியோ எவருக்கும் விளக்கத் தேவையில்லை. கிரிக்கட்டைப் பார்த்தல் , சங்ககாரவின் தலைமையின் கீழ் ( இவரும் ரனதூங்க போல பண்டைய சிங்கள தலைநகர் கண்டியை சேர்ந்தவர் ) ஜெயவர்த்தன, வித்தியாசமாக துடுப்பாடும் டில்ஷான், அனுபவமிக்க ஜெயசூரிய மற்றும் முரளி , அதிசய பந்து வீச்சாளர் மென்டிஸ் மற்றும் சாதிக்கத் துடிக்கும் இளைய வீரர்கள் என காணபடுகின்றது இலங்கை .
விளையாட்டில் அரசியல் எதுக்கு என்று அரசியல் புரியாத சில புத்திஜீவிகள் சொல்லுவார்கள். ஆனால் விளையாடே அரசியல் என்பது இன்றைய உலக நியதி. போலி தேச பக்தர்கள் தமது தாய் நாட்டுப் பற்றிக் காட்டி , முடியுமானால் தமது எதிரணியை உதைக்க முயலும் காலம் நமது காலம். இலங்கை இந்த உலகக் கிண்ணத்தில் வெற்றி பெற்றால் , தமிழின அழிப்பை கடவுளே பாராட்டுகின்றார் என்று மக்களுக்கு போதிக்க ஏராளமான அரசியல் வாதிகளும் புத்த சாமியார்களும் காத்திருக்கின்றனர். இந்தியா கூட போரை வென்று இலங்கை ஒன்றுபட்டதால் கிடைத்த வெற்றி சொல்லக்கூடும்.
இந்த வெற்றி மட்டும் கிடைத்தால் அது, முள்ளுக் கம்பிகளுக்குள்ளே சிறைப்பட்டு , அடுத்த வேளை உணவுக்கும் நீருக்கும் , அடிமைப் படுதியவனின் , உற்றார் உறவினரைக் கொன்று குவித்தவனின் கையை எதிர்பார்த்து ஏங்கி , எனக்கொரு விடியல் வராதா எனத்தவிக்கும் எமது உறவுகளின் துன்பங்களை மறைக்கவே உதவப் போகின்றது.தமது நாடு அணியின் வெற்றி தமது இருப்பை கேள்விக்குள்ளாகும் எனப் பயந்து நாட்களை கழிக்கும் இன்றைய ஈழத் தமிழரின் நிலை உலகில் யாருக்கும் வரக் கூடாது.
காந்தி உண்ணாவிரதமிருந்துதான், பிரித்தானியாவிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக இன்னும் பல அறிவுஜீவிகள் திருவாய் மலர்ந்து வருகின்றனர். இந்தக் கதை அனைத்து மக்களுக்கும் தெரிந்ததுதான். இப்போது நாம் ஒரு புதுக்கதை நம்மில் பலருக்கு தெரியாத கதையைப் பார்க்கலாம். இந்த கதையின் நாயகன் பெயர் , பாந்தி அத்துடன் அடிகளோ ஜீ என்றோ உங்க விருப்பத்துக்கு ஏற்றமாதிரி சேர்த்துக்கொள்ளலாம். இவர் போராடியது ஹிந்தியா எனும் நாட்டுக்கு எதிராக , அமிழகம் எனும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க என்று வைத்துக் கொள்ளலாம்.
காந்தியின் உண்ணாவிரதக் கதைக்கு ஒத்த கதை என்றதும் , யாரும் நம்ம நாயகன் பாந்தி , காந்தி மாதிரி குணவியல்பு கொண்டவன் என்றோ , ஹிந்தியா பிரித்தானியா மாதிரி என்றோ கற்பனை செய்யக் கூடாது. அப்போ எப்படின்னு நீங்க கேட்கலாம். சுருக்கமா சொன்னா , நம்ம பாந்தி , அந்த காந்தியை விட உண்மையிலேயே நல்லவன். ஆனா இந்த ஹிந்தியாவோ , அந்த பிரித்தானியாவை விட ரொம்ப கெட்ட தேசம். சரி இவ்வளவு விளக்கம் போதும் நாம் இப்போது கதைக்குப் போவோம்.
இந்தியா காந்தியை தலைவனாக ஏற்றுக்கொண்ட மாதிரி , அமிழக மக்களில் பெரும்பாலோனோர் நம்ம பாந்தியை ஏற்றுக்கொள்ள , பாந்தியும் , உண்ணாவிரதம் , உப்பு அள்ளுதல் எனக் கலக்க ஆரம்பித்து விட்டார். இதப் பார்த்து ஹிந்தியாவுகோ ஒரே ஆச்சரியம் நம்ம பிரித்தானியா என நினைத்து காமடி கீமடி இந்த பாந்தி பன்றாரோ என ஒரே குழப்பம். இதில ஒரு விடயம் எல்லாருக்கும் சொல்லணும் , இந்த ஹிந்தியா வந்து , போனியா என்னும் பெண்ணால் , பண மோகன் சங்கு என்பவரை வந்து ஆளப் பட்டது. அவரும் அமிழக விடயங்களை கவனிக்க , நாறவாயன் மற்றும் சவ பங்கர் கூனன் என இரண்டு பேரை வைத்திருந்தார். இந்த இரண்டு பெரும் அடிகடி அமிழகம் போய் வந்து , கைப்புள்ள கணக்கா , சொந்த ஊருல வந்து பச்சைப் பொய்யா சொல்ல அமிழக மக்களின் இனத்தை சேர்ந்த , ஹிந்தியாவில் வாழும் மற்றவர்களும் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடுவார்கள்.இது ஒரு ஒரு நல்ல நகைச்சுவையாக ஹிந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் மற்றைய இன மக்களுக்கும் அமையும்.
என்ன செய்யலாம் எனத் தலையைப் பிய்த்துக் கொண்ட போனியா , பண மோகன் சங்கு , நாறவாயன் மற்றும் சவ சங்கர் கூனன் சில முடிவுகளுக்கு வநது அவற்றை அமுல் படுத்த தொடங்கினர். இந்த கதையில இன்னும் சில காமடியன்கள் , தண்டநிதி , மாயலலித்தா என நீளும், ஆனா அப்புறம் எப்படி இந்த கதையை கொஞ்சம் சீரியசா முடிகிறதாம் . அதனால அதப் ஒரு முழு நீள நகைச்சுவை சித்திரமா பிறகு பாப்போம். இப்போ கதைக்கு திரும்புவோம்.
முதலில் அதே இனத்தை சேர்ந்த தண்ட நிதியை தூண்டி விட்டு , பாந்தி என்னுடய நண்பன் ஆனால் அப்புறமா நான் அப்படி சொல்லவேயில்லை நான் சொல்றது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் பல்டி அடிக்க செய்தனர் . இதில ஒரு விடயம் எல்லாருக்கும் தெரியனும் , இந்த தண்ட நிதி , தான் உலக அமிழ் மக்களின் தலைவர் எனத் தனக்கு தானே பட்டம் சூடிக் கொண்டவர். அவருக்கு பாந்தி கதநாயகனாவது வேப்பம் காயாக கசந்தது. அதோட மாயலலித்தாவுக்கோ , அமிழ் மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் பிடிக்காது அப்படி ஒரு காரக்டர் அவங்க. அவங்க ஒரு பெரிய தத்துவ முத்த உதிர்தாங்க , " போர் என்றால் மக்கள் சாவது இயல்பு" அப்படின்னு. இப்படியே இவங்க அரசியல் பண்ணி , ஹிந்தியாவுலுள்ள அமிழ் இன மக்களின் இன உணர்வை திசை திருப்பிக் கொண்டிருந்தாங்க. ஆனால் பாந்தியோ அமிழ் இன மக்களின் ஒப்பற்ற தலைவனாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வந்தார்.
போனியா அன் கோ ரொம்ப கடுபடைந்து விட்டனர். சரி , பாந்தி சுக போக வாழ்வு வாழ்கின்றார் என ஒரு கட்டு கதையைப் பரப்பி பார்த்தனர். ஒண்ணுமே வேலைக்காகல. சரி பிரிடிஷ் அரசு போல விட்டுப் பிடிக்கலாம் என்றா , அந்த காந்தி போல சொந்த மக்களுக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கின்ற ஆளும் இந்த பாந்தி கிடையாது. அதே நேரம் ஹிந்தியாவுக்கு ஒரு விடயம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அந்த காந்தி, அவ்வளவு வஞ்சித்தே , மக்கள் அப்படி நேசிச்சாங்க. இப்படியே விட்டால் பாந்தி , தன்னிகரற்ற தலைவனாகி, உறங்கிக் கொண்டிருக்கும் ஹிந்திய அமிழ் மக்கள் உரிமை கேட்பார்களோ என்று ஒரே கலக்கம். இந்த ஹிந்திய அமிழ் மக்கள் எப்படின்னா , தம் பகுதியை சுத்தி இருக்கும் அனைவரும் சேர்ந்து வீடு கட்டி அடித்தாலும் கண்டுக்கவே மாட்டார்கள். இத குண இயல்பை பாந்தி மாத்திடுவாரோ என பயந்தே போய்ட்டாங்க. சரி நம்ம அரசியல காட்டலாம் என நினைச்சாங்க. பாதியை மதம் மற்றும் ஜாதி கூறி ஒரே பிரச்சாரம் பண்ணினாங்க. பாந்தி ஒரு பயங்கரவாதி என்னாங்க. ஹ்ம்ம் அமிழ் மக்கள் ஆசையே வில்லை. சரி என்ன பண்ணலாம் என யோசிச்சாங்க. நம்ம பாந்தி தான் அஹிம்சை வாதியாசே , பாதுகாப்புக்கு யாருமே கிடையாது. தமது குண்டர் படையை அனுப்பி நள்ளிரவில் போட்டு தள்ளி விட்டு , சொத்து மோதலில் பாந்தியை சொந்த கட்சிக் காரனே கொன்றதாக கூறி , பாந்தி கட்சிக்காரன் எல்லாரையும் சிறையில அடைச்சாங்க. குழம்பிப் பொய் இருந்த மக்கள் மத்தியில , பாந்தியைப் பற்றிய பல்வேறு கட்டுக் கதைகளை பரப்பினாங்க. இலங்கையில் போர் நிறுத்தம் என உலகத்தில் குறுகிய நேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த கருணாநிதி அறிவிக்க எப்படி அவரது குடும்ப மீடியா அதை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றதோ அப்படி அதே மாதிரி என்னு நீங்க வைச்சுக்கலாம்.
எல்லாம் முடிஞ்சப்புறம் , போனியா அன் கோ கூடிப் பேசினாங்க. அவங்க எல்லாருக்குமே ஒரே ஒரு ஆச்சரியம் , அந்த பிரிடிஷ் காரன் ரொம்ப கேனையனா இருப்பான் போல இருக்கே . மீடியாவினால் சூழப்பட்ட இந்த நேரத்திலேயே , நாம இப்படி ஒரு கொலை பண்ணி அத அப்படியே மறைத்து விட்டோம். ஆனா பிரிடிஷ் காரன் அந்த காந்தியை ஒண்ணுமே பண்ணாம பூப் பறிச்சுக் கொண்டா இருந்தான் எனப் பேசி தமது ராஜ தந்திரத்தை மெச்சிகொண்டனர் தன்னயே நக்கி இன்புறும் நாய்கள் போல. இதில என்ன பெரிய்ய ஜோக் என்றால் , இப்பவும் சில புத்திசாலிகள் , காந்தி வழியே நல்லது என்னு என்று சொல்லீட்டு இருக்காங்க எனக் கூறி போனியா குலுங்கி குலுங்கி சிரிக்க நம்ப கதை சுபமே முடிவடையுது.
குறிப்பு : முன்னரே குறிப்பிட்டது போல இது ஒரு கதையே . யாரும் இதை நிகழ் காலச் சம்பவங்களுக்கு முடிச்சு போட்டு என்னை திட்டக் கிளம்பக் கூடாது.படிச்சமா சிரிச்சமா என்னு போய்க்கினே இருக்கணும்.மகிழ்ச்சியை வேணும்னா பின்னுட்டமா பகிர்ந்துகோங்க :-)
நான் சொல்லித்தான் , தமிழ் அரங்கம் ரயாகரன் பற்றி உங்களுக்குகெல்லாம் தெரிய வேண்டுமென்பது கிடையாது. அவரே தமிழில் இது போல ஒரு இணைய தளம் கிடையாது என்று சொல்லிவிட்டார் . உண்மைதான். மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்ட பக்கங்கள். ஆயிரக் கணக்கான கட்டுரைகள் , நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், ஒரு ஆவணக் காட்சியகத்தையே தன்னுள் கொண்டிருக்கும் இணைய தளம். எனது நண்பன் ஒருவன் சொல்லுவான் , பாசிசம் என்று ரயாகரன் தொடங்கினார் என்றால் , மடை திறந்த வெள்ளம் போல எழுதிக் கொட்டிவிடுவார் என்று.
தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட , தினமும் வருகை தரும் ஒரு சிறந்த வலைப்பக்கம். மாற்றுக்கருத்து எனும் அடை மொழியை தூக்கிப் பிடிப்போரில் , எனக்கு ரயாகரனை பிடிக்கும். என்னதான் தனி இயக்கத்தில் இருந்து , புலிகளுக்கு எதிராக பல்கலைகழகத்தில் போராட்டம் நடத்தி , புலிகளால் கைதும் , ரயாகரன் பார்வையில் கடத்தப்பட்டும் இருந்தாலும் , பேரினவாத சிங்கள கொலை வெறி அரசின் அராஜகங்களை , வெளிக்கொணர்வதில் முழு மூச்சாக உள்ளவர். பாசிசம் என்று எழுதி எழுதி பழக்கப்பட்டதாலோ என்னவோ , இப்போது பாசிச மகிந்த என்றே எழுதி வருபவர்.
வன்னியில் இடம் பெற்ற பொது மக்கள் படு கொலையை , பெண் போராளிகளின் இறந்த உடல்களின் மேல் சிங்கள வெறி நாய்கள் நடத்திய கோரத்தாண்டவங்களை , உடனுக்குடன் உலகுக்கு வெளிபடுதியவர். வன்னிப் பேரவலம் நடந்த பின் அடுத்த ஓரிரு நாட்களில் அவர் எழுதிய அல்லது பிரசுரித்த கட்டுரைகள் எல்லாம் , ஒரு உண்மையான நடுநிலமையான மாற்றுக் கருத்தாளராக அவரை வெளிபடுதியவை. ஆனால் அவர் பற்றிய இந்த தற்காலிக எண்ணக் கருக்கள் எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் அவராலேயே கருக் கலைப்பு செய்யப்பட்டன.
தனது எழுத்துகள் , சிங்களப் பேரினவாதத்துக்கு துணை போனாலும் பரவாயில்லை , புலிகள் பற்றிய மக்களின் பார்வை அழிந்தொழிந்து போகவேண்டும் எனக் கொக்கரிகின்றார். நீங்கள் ஏன் ஈழம் சென்று போராடக் கூடாது எனக்கேட்டால் , அதற்கான வழிகள் ஏற்படின் அதைச் செய்வோம் என சலாப்புகின்றார்.
தோழர் ரயாகரன் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், ஆயிரம் விமர்சனங்கள் இருந்ததாலும் , புலிகளின் தலைவரும் புலிகளும் , பெரும்பான்மையான ஈழத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். நடுநிலையாக இருந்த தமிழர்கள் கூட , வன்னிப் பேரவலத்தின் பின்னர் , புலி ஆதரவுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் புலிகளுக்கு எதிராக இருப்பவர்கள் யார் எனின் , புலிகளால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பு அடைந்தவரே எஞ்சுகின்றனர் . இந்த நிலையில் உங்களின் இந்த மாதிரி கட்டுரைகளும் மீள்பதிப்புகளும் , மக்களிடமிருந்து உங்களை மேலும் அன்னியப் படுத்தவே செய்யும். நான் உங்கள் தனிப்பட்ட காயங்களை புரிந்து கொள்கின்றேன் . புலிகளால் பாதிக்கப்பட்ட கோபத்தில் , தமிழின தூரோகியாக மாறி , சிங்கள மற்றும் இந்திய அரசுக்களின் அடிவருடிகளாக மாறாமல் , தமிழர் மீதான இனப் படுகொலைகளை எதிர்த்து நிற்கின்றீர்கள். அதை நான் மதிக்கிறேன். போற்றுகின்றேன் . அதே நேரத்தில் , உங்ககளுக்கு நீங்களே சுய விளம்பரம் செய்வது , இவை அனைத்தையும் மறைத்துவிடும் .
மக்களுக்காக போராட போகும் போது நாம் தாம் அதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர , "அதற்கான வழிகள் ஏற்படின் செய்வோம்" என இருத்தல் , ஒரு உண்மையான மக்கள் போராளிக்கு இலக்கணமல்ல.
மீண்டும் சொல்கின்றேன் , நீங்கள் ஒரு தமிழ் உலகம் அறிந்த எழுத்தாளர் மற்றும் தமிழ் மக்களுக்காக இன ரீதியிலும் , சமுக ரீதியிலும் மற்றும் கலாசார ரீதியிலும் போராட்டம் நடத்தியவர் , நடத்துபவர். 1987 ல் இந்திய படைகளுடன் மீள் பிரசன்னமான , தமிழ் ஆயுதக் குழுக்கள் , எவ்வாறு கொஞ்ச நஞ்சமிருந்த தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதறடிதனவோ, அவ்வாறு இல்லாது , நீங்கள் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க உதவவேண்டும். உங்கள் எழுத்தாற்றல், அரசியல் மற்றும் சமூகப் பார்வை நீங்களும் நாமும் நன்கு அறிந்தவை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இனியும் எமக்கு கிடைக்கப் போவதில்லை, இது இறுதி சந்தர்ப்பமும் கூட. உங்களால் முடியும் தோழர் ரயாகரன். தயவு செய்து நடத்திக் காட்டுங்கள்.
(மேலதிக பத்திகள் இணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பதிப்பு)
புலிகளின் தலைவரின் வீர மரணம் பற்றி இன்னுமே எவராலும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை, அந்த இருண்ட இறுதிக் கணங்கள் புலிகளின் தலைவருக்கும் இன்னும் சிலருக்குமே வெளிச்சம். அதை மக்களுக்கு வெளிக்காட்ட அந்த சக்திகளும் தயாரில்லை .இந்த நிலையில் பல்வேறு சக்திகள் பல கட்டுக் கதைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி தமிழ் உணர்வாளர்களை மனம் தளர வைக்க முயற்சித்து வருகின்றன.
முதலில் தலைவர் உயிருடனுள்ளதாக அறிவித்த புலிகளின் அனைத்துலக செயலகம், தற்போது வீரசாவடைந்தாக துக்கம் அனுஷ்டிகின்றது. தமிழக தமிழின உணர்வாளர்களான நெடுமாறனும் வைகோவும் , "இது தவறான செய்தி , தலைவர் வருவார்" என்கின்றனர். பத்மநாதனை கண்டிக்கின்றனர். தமிழின விரோதிகள் எதிர்பார்த்தும் இதைத்தான். தலைவரின் மரணம் , ஈழ மற்றும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அத்துடன் இனிவரும் புலிகளின் தலைமை , இந்த அனுதாபத்தை பயன் படுத்தி இது வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் நடுநிலைமை வகித்தவர்களையும், ஒன்று திரட்டி விடுமோ என்ற அச்சமும் இந்த தமிழின விரோதிகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளிடன் உள்ளது. எனவே தலைவர் மரணத்தை ஒரு வதந்தியாக வைத்திருப்பது , இவர்களுக்கு சாதகமே. அத்துடன் புலித் தலைமை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கூட , ஈழ தமிழரை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தவும் மேலை நாடுகளை பாராமுகமாக வைத்திருக்கவும் முடியும்.
இந்த நிலையில் இதுவரை புலித்தலைமையை விமர்சித்து , புலிகளால் தான் எல்லாமே என்று கண்ணை மூடிக்கொண்டு அறிக்கை விட்டு தம்மை தாமே மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் , இன்று , புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரை , தூரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர் . இதுவரை காலம் அவர்கள் சுமத்திய குற்ற சாட்டுக்களான, தனது பிள்ளைகளை யுத்தத்தில் ஈடுபடுத்த வில்லை , யுத்த வலயத்தை விட்டு ஓடிவிட்டார் போன்றவை பொய்யாக , என்ன செய்வதறியாது திகைத்துபோய் நிக்கின்றனர், மற்றும் அவர்களை பொறுத்தவரை புலித் தலைமை மரணமடைந்து விட்டது இனியும் எதிர்த்து அறிக்கை விட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனக் கண்டு கொண்டனர் .
இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் எனியும் ஒரு வலிமையான தமிழ் தலைமை வர அனுமதிக்க போவதில்லை. தமக்கும் அந்த இடத்தை நிரப்ப ஆளுமை கிடையாது என்றும் தெரியும். அத்துடன் வெறுமனே கண்டன அறிக்கை விட்டு பழகிப் போன இவர்கள் இன்று யாரை எதிர்ப்பது என்று தெரியாது புலம்பி தமது அடுத்த இலக்காக தெரிவு செய்திருப்பது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் பத்மநாதனை.
நான் இங்கே புலித்தலைவர் இறந்து விட்டதாகவோ , பத்மனாதனுக்காக வாதிடவோ வரவில்லை. எனது ஆதங்கமெல்லாம் , தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய இந்த தருணத்தில் அவர்களை குழப்பத்தி ஆழ்த்தி பேரினவாதிகளுக்கு துணை போகின்றனரே இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் என்பது மட்டுமே. புலிகள் மட்டும் ஒதுங்கிக் கொள்ளட்டும் , தமிழ் மக்களுக்கு நாம் விடுதலை பெற்று தருவோம் என்றெல்லாம் முழக்கமிட்டனர் இந்த மாமணிகள். இப்போதுதான் அந்த சூழ்நிலை வந்துவிட்டதே , ஈழத்துக்கு போய் உதவுவார்கள் என்று பார்த்தால் , எனி யாரை எதிர்த்து அறிக்கை விடலாம் என்று சிந்திகின்றன்ர் இந்த புத்தி ஜீவிகள்.
இதில் ஒரு புகழ் பெற்ற (ஏ) மாற்றுக் கருத்தாளர், இனியும் தான் இலங்கை போக முடியாது , ஏனென்றால் இலங்கை அரசின் அச்சுறுத்தல் உள்ளது என்கின்றார். இலங்கை அரசையும் யாரும் வந்து அழித்த பின்தான் போவாரோ ?.இன்னும் சில மாற்றுக் கருத்தாளர்கள் , எப்போதும் பாசிசம் சார்ந்த எதிரியை தேடுபவர்கள். புலித்தலைமை இருக்கும் வரை , பாசிசப் புலிகள் என கர்சிதவர்கள் , இப்போது பாசிஸ்ட் மகிந்த என உறுமுகின்றனர் . இவர்களுக்கு பாசிசம் என்ற வார்த்தையை கற்றுக் கொடுத்த ஆசிரியரைப் பிடித்து வாங்கு வாங்கவேண்டும் ஏனையா இவர்களுக்கு போய் இதை கற்றுக் கொடுத்து , ஒரு சமுதாயத்தையே கடுப்படித்த பாவத்துக்கு ஆளாகி விட்டீர்களே என்று.
மாற்றுக் கருத்துகள் ஜனநாயகத்துக்கு அவசியம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. ஆனால் எதிர்ப்பு அரசியல் நடத்தியே பழகிபோய் , தன்னை வித்தியாசப் படுத்திக் காட்டுவதற்காக , இவ்வாறான் கருத்துகளை வெளிபடுத்துவது ஜனநாயகத்துக்கு எந்த வழியிலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தமாட்டாது. மக்களே தயவு செய்து , இந்த (ஏ) மாற்று காரர்களின் பேச்சை நம்பி பேரினவாதத்துக்கு சோரம் போய்விடாதீர்கள். இந்த போராட்டத்தில் நாம் உண்மையான மாற்றுக் கருத்தாளர்களை உருவாக்காது , எட்டப்பர்களை மட்டுமே உண்டாக்கி உள்ளோம் .இதற்கு என்ன காரணம் என்று விவாதம் செய்து ஒருவர் மேல் ஒருவர் பழியை போடாது, எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்.
