ஈழத்தில் போர் உக்கிரமாக நடைபெற்று எமது உறவுகள் எல்லாம் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில்அதுவரை இலங்கை என்னும் நாடு உள்ளதே தமக்கு தெரியாதுபோல மௌனம் சாதித்து வந்த வடஇந்திய ஊடகங்கள் கூட ,இந்தப் பிரச்னை பற்றி செய்திவழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.இதற்கு முக்கிய காரணம் மேலைநாட்டு ஊடகங்கள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முக்கியம் கொடுக்க தொடங்கியமையாகும்.இதில் வேதனை தரும் விடயம் என்னவெனில் இந்த வட இந்திய ஊடகங்கள், ஸ்ரீ லங்கா அரசின் ஊதுகுழல்கள் போல , சிங்கள அரசு தந்த தகவல்களை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு வெளியிட்டன. ஈழத் தமிழ்ப் படுகொலையை அப்படியே மூடி மறைத்தன. ஓரிருவர் விபத்தில் சிக்கி இறந்தாலே , நாள் முழுக்க செய்தி கூறும் இந்த ஊடகங்கள் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர் கொல்லப் பட்டதை அப்படியே இருட்டடிப்பு செய்தன.அத்துடன் ஈழத் தமிழர் மீதும் புலிகள் மீதும் சிறிதளவேனும் அனுதாபம் வரக்கூடாது என்பதற்காக , "ராஜிவ் காந்தியைக் கொலை செய்த பயங்கரவாதிகள்" என்று கூவிக் கூவி
முத்திரை குத்தின.
பொதுவாக வட இந்திய தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்துவது வழக்கம். ஈழப்பிரச்சனைக்காக அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பார்த்தால் தமிழின உணர்வுள்ள ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் வேதனை பீறிடும். இந்து ராம் , சோ மற்றும் சுபிரமணியன் சுவாமி என்னும் தமிழின விரோதிகளே அவர்கள்.வட இந்திய ஊடகங்களுக்கு இவர்களை தவிர தமிழகத்தில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் எவரும் இல்லையா என்ற ஆதங்கமே எழுகின்றது.இவர்களினது தமிழ் தேசிய விரோதப் போக்கும் , ஈழம், காவிரி மற்றும் சேது சமுத்திர நிலைப்பாடும் உலகறிந்தவை.வட இந்திய ஊடகங்கள் தாம் எதிர்பார்க்கும் பதிலுக்காக இவர்களை அழைத்து தமிழகபுத்திஜீவிகளாக வடஇந்தியர்களுக்கு அறிமுகப் படுத்த இவர்களும் ,புலிகள் அழிக்கப் பட்டதில் அனைத்து தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி ,எந்த ஒரு ஈழத் தமிழனும் இதுவரை இலங்கையில் கொல்லப் படவில்லை என்று முத்துகளை உதிர்ப்பார்கள்.வட இந்திய ஊடகங்களும் இதுவே தமிழக மக்களின் எண்ணவோட்டம் என இனிதே செய்தி அரங்கத்தை நிறைவு செய்யும்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள் எல்லாம் கொல்லப்படும் அந்தமான் சிறைகளிலும் வாழ்க்கையைத் தொலைக்க , வெள்ளையர்களுடன் ஒட்டி உறவாடி ,வெள்ளையினப் பெண்களுடன் "நட்பு" பாராட்டிய நேரு மற்றும் அவரது சகபாடிகளே , வெள்ளையின அரசால் இந்தியாவை ஆள அனுமதிக்கப் பட்டனர். அது போல , வட இந்திய ஊடகங்களும் தமது விருப்பு வெறுப்புகேற்ப, தமிழகத்தின் குரலை தாமே உருவாக்குகின்றன. அப்பாவித் தமிழர் நாமோ வழமை போல கொர்ர்ர்ர்ர் ....
என்னைப் பற்றி....
Welcome
எனது பதிவுகளை தமது தளங்களில் மீள் இடுகையிட விரும்புவோர் , எனது தள முகவரியை கண்டிப்பாக அந்தப் பதிவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிடின் படைப்புத் திருட்டு என்றே கருதப்படும். நன்றி
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
korrrrrrr
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நல்லா தூங்குவோம்
Post a Comment